கல்லுபாளையத்தில் வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கல்லுபாளையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2024-01-31 13:30 GMT
கல்லுபாளையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, சோமூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் வயது 32.இவரது மனைவி துர்காதேவி வயது 29. சரவணனுக்கு கடந்த ஒரு வருட காலமாகவே தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் வலி தீரவில்லை. இதனால் விரக்தி அடைந்த சரவணன், ஜனவரி 29ஆம் தேதி நள்ளிரவு 11:30- மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவருக்கு மனைவி துர்கா தேவி, இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்திற்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சரவணனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Tags:    

Similar News