திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!

தூத்துக்குடியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-10 15:05 GMT

பைல் படம்

தூத்துக்குடியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதவாது: தூத்துக்குடி அருகில் உள்ள தருவைகுளம் 125 வீடு காலனி தெருவைச் சேர்ந்தவர் தொம்மை மகன் போஸ்கோ (27), மீனவர்.

இவருக்கு திருமணம் செய்வதற்கு பல இடங்களில் பெண் பார்த்தும் சரியான வரன் அமையவில்லையாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து போஸ்கோ தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகுமாரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News