வாகனம் மோதி இளைஞர் பலி : உறவினர்கள் சாலை மறியல்

அம்மையப்பநல்லூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்தார். உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2024-01-20 05:29 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த வரதன் என்பவரது மகன் துரைராஜ் வயது (28), இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். துரைராஜ் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றபோது அம்மையப்பநல்லூர் என்னும் இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விநாயகம் மற்றும் போலீசார் துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அந்த வாகனத்தை உரிய முறையில் கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள் இறந்தவர் உடலை பெற மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கனரக வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டும் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் சென்னை மற்றும் புறநகருக்கு கட்டுமான பொருட்களை வாகனங்கள் எடுத்து செல்லும் நிலையில் இது போன்று விபத்துக்கள் நடைபெறுவதாகவும் போதிய சிசிடிவி கேமராக்கள் காட்சிகள் இல்லாததும் இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பை பெற்றுத் தர இயலாத நிலை உள்ளது என்று புலம்பும் நிலை ஏற்பட்டுளளது.

Tags:    

Similar News