வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் இளைஞர் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2024-06-21 15:58 GMT

 பள்ளிப்பட்டு அருகே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தூர் அருந்ததியர் காலனியில் 40க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  ஊராட்சி  நிர்வாகம் சார்பில்  கிராமமக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந் நிலையில்,கடந்த இரண்டு நாட்களாக கிராமத்தைச் சேர்ந்த   சிறுவர்கள், பெண்கள் உட்பட  14க்கும் மேற்ப்பட்டோருக்கு வாந்தி, பேதி, மற்றும் வயிற்று வலி ஏற்ப்பட்டு அப்பகுதியில் உள்ள  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்   அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்களில்  சாம்பசிவம் (27) என்ற வாலிபர்   வாந்தி, பேதி மற்றும்  வயிற்றுவலி ஏற்ப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். 

 கிராமத்தில் வாந்தி, பேதிக்கு வாலிபர் இறந்த நிலையில் 14க்கும் மேற்ப்பட்டோர்  பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவ குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு  கிராமமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்து மாத்திரை வழங்கி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  கிராமமக்கள் வாந்தி பேதி ஏற்ப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறையினர்  குடிநீர் பைப் லைன்கள்  ஆய்வு செய்து,  குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.  குடிநீர் ஆய்வு அறிக்கை வந்த பிறகே கிராமமக்களுக்கு வாந்தி,பேதி மற்றும் வயிற்று வலி ஏற்ப்பட்டதற்கு காரணம் தெரிய வரும் என்று  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News