பாப்பினியில் இளைஞர் தற்கொலை

உடல்நிலை பாதிப்பு காரணமாக சலூன் தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

Update: 2024-06-03 06:52 GMT

இளைஞர் தற்கொலை

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த  பச்சாபாளையம் கிராமம், பாப்பினியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் சரண் வயது 21. இவர் அப்பகுதியில்  சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதிகமான குடிப்பழக்கம்இருந்ததாகவும், இதனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணையம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினை  ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த  நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த சரண் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 15 நாட்கள் சிகிச்சை  பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் சரண் அவரது வீட்டில் பணம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கோபமடைந்த சரண் அவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள பப்பாளி மரத்தில் நைலான் கயிற்றை கொண்டு தூக்கிட்டு கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சரணை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பிரேத பரிசோதனை  உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தற்கொலை குறித்து காங்கேயம் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News