எஸ்டிபிஐயில் இணைந்த இளைஞர்கள்

தாழையூத்தில் நடந்த எஸ்டிபிஐ அரசியல் பயிலரங்கத்தில் ஏரளமான இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.

Update: 2024-02-18 04:40 GMT

உறுப்பினர் அட்டை 

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட மானூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக அரசியல் பயிலரங்கம் தாழையூத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் நாகூர் மீரான் தலைமை தாங்கினார். இதில் தாழையூத்து பகுதியை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு கட்சியின் அடையாள அட்டையை பொதுச்செயலாளர் கனி வழங்கினார்.
Tags:    

Similar News