மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு!!
By : King 24x7 Desk
Update: 2024-09-21 07:28 GMT
பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் ஐஏஎஸ் தரத்தில் உள்ள அதிகாரிகள் இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாதத்திற்கு ஒருமுறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் ஆய்வு செய்து அறிக்கையை 5ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.