சென்னைக்கு கனமழை எச்சரிக்கை ஏற்பாடுகள் தயார்: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
By : King 24x7 Desk
Update: 2024-10-12 06:32 GMT
அமைச்சர் கே.கே எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன்
வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.