தமிழ்நாட்டில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவோம்: துணை முதல்வர் உதயநிதி
By : King 24x7 Desk
Update: 2024-11-11 06:59 GMT
udhayanithi stalin
தமிழ்நாட்டில் இருந்து தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2,000 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது; சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் இதுவரை 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திராவிட மாடல் அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் அகாடமிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விளையாட்டு துறையின் தலைநகரமாக மாற்றுவோம் என அவர் கூறினார்.