தூத்துக்குடி அனல்மின் நிலைய தீ விபத்து தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!!
By : King 24x7 Desk
Update: 2025-04-03 05:51 GMT

thoothukudi thermal power station
தூத்துக்குடி அனல்மின் நிலைய தீ விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், அய்யப்பன், ஆர்.வைத்திலிங்கம், ஜவாஹிருல்லா ஆகியோர் தீர்மானம் கொண்டு வந்தனர். தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் கடந்த 15-ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.