தி.மலை கோயிலில் நவம்பர் 14ம் தேதி பிற்பகல், பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!
By : King 24x7 Desk
Update: 2024-11-09 07:56 GMT
Tiruvannamalai
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 14ம் தேதி பிற்பகல், பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14ம் தேதி அஸ்வினி நட்சத்திரத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதால், அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.