தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது!!
By : King 24x7 Desk
Update: 2024-12-02 06:33 GMT
rain
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ, தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தலில் 32 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 23 செ.மீ. மழை பதிவானது.