நியாயவிலைக் கடைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்
Update: 2024-02-03 05:17 GMT
''நியாயவிலைக் கடைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதோடு ‘பயோமெட்ரிக்’ கைரேகைப் பதிவு செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பின், அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்குப் பொருள்களை வழங்கிட வேண்டும் என்றும் அதற்காகப் பொதுமக்களை எவ்விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்றும்'' அமைச்சர் சக்கரபாணி கேட்டுக் கொண்டார்.