முல்லை பெரியாறு அணை விவகாரம் நிபுணர் குழு கூட்டம் ரத்து: தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆலோசனை நடத்த முடியாது, கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கண்டிப்பு
By : King24x7 Rafi
Update: 2024-05-29 05:34 GMT
Dam
முல்லை பெரியாறில் கேரளா புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி ஆலோசனை கூட்டத்தை நடத்த முடியாது என்று கூறி நேற்று நடைபெற இருந்த நிபுணர்கள் குழு கூட்டத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ரத்து செய்தது. இது தொடர்பாக கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா இடையே முல்லை பெரியாறு அணை தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது.