இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

Update: 2024-05-16 05:13 GMT

Sunil

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். சுனில் சேத்ரி ஆந்திர மாநிலம் செகண்ட்ராபாதில் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் தந்தை கே.பி.சேத்ரி. இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேலை செய்தவர். அவரது அம்மா சுசிலா சேத்ரி நேபாளத்தை சேர்ந்தவர். சேத்ரிக்கு கிரிக்கெட் தான் பிடித்தமான விளையாட்டு. சச்சின்தான் அவருக்கு பிடித்த வீரர். அதனால் அவரும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பி தன் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரை அணுகியுள்ளார். “கிரிக்கெட் கிட் கொண்டு வந்தால் பயிற்சி கொடுக்க தயார்” என சொல்லியுள்ளார் அந்த ஆசிரியர்.

Similar News