ராணிப்பேட்டை: 12 ஆயிரம் அரசியல் விளம்பரங்கள் அழிப்பு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறி சுவர் விளம்பரம் வரைந்தால் தகுதி நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-03-26 02:27 GMT

 கலெக்டர் வளர்மதி

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் அரசு மற்றும் பொதுக் கட்டிடங்கள், தனியார் இடங்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை அரசு மற்றும் பொது இடங்களில் 9,718 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகளும், தனியார் இடங்களில் 2,320 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகளும் என மொத்தம் 12,038 அகற்றப்பட்டுள்ளன. எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி விளம்பரங்களை மேற்கொள்ளும் நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News