இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20லட்சம் பீடி இலைகள் பறிமுதல்!

காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-04-22 10:39 GMT

பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காயல்பட்டினம் கடற்கரையில் க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா தலைமை காவலர் ராமர், மணிகண்டன், இருதயராஜ், காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடற்கரையில் நிறுத்தியிருந்த பைபர் படகில் சோதனை செய்தபோது, அதில் 30 கிலோ வீதம் 80 மூட்டைகளில் பீடி இலைகள் சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்து. இதையடுத்து சுமார் 2500 கிலோ பீடி இலைகளை படகுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20லட்சம் ஆகும். இது தொடர்பாக திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் அந்தோணிதுரை (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News