தலைமன்னார் பகுதியில் இலங்கை மீனவர்கள் 8பேர் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-10-25 11:38 GMT

கைது செய்யப்பட்ட மீனவர்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி தலைமன்னார் சர்வதேச இந்திய கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்ததாக கோரி இலங்கையைச் சேர்ந்த 4 பைபர் படகு மற்றும் எட்டு இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கைது செய்தனர.

அதே நேரத்தில் அந்த இடத்தில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாட்டு படகும்,அதிலிருந்து நான்கு மீனவர்களையும் கைது செய்து, மண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டனர

இந்நிலையில் பிடிபட்ட தமிழக நாட்டுப் படகில் சுமார் 500 கிலோ கடத்தல் மஞ்சள் மற்றும் 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை இருந்தது. மேலும் கடத்தல் தங்கம் ஏதேனும் கொண்டு வந்தார்களா அல்லது போதை மூலம் ஏதேனும் கடத்தப்பட்டதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் இலங்கை இந்திய மீனவர்களிடம் பேலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்


Tags:    

Similar News