கடலூரில் மீன் பிடிக்க தடை விதிப்பு

கடலூரில் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 8ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-01-06 02:04 GMT

கடலூரில் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 8ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடலூா் மாவட்டத்தில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும் (ஆரஞ்சு எச்சரிக்கை) என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் மேலும், கடல் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசும் எனவும் வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதால் கடலூா் மாவட்ட மீனவா்கள் இன்று 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News