நாமக்கல்லில் பாதுகாப்பு துறை அமைச்சர் ரோடு ஷோ - ட்ரோன்கள் பறக்க தடை

நாளை ஒரு நாள் மட்டும் நாமக்கல் மாவட்டத்திற்குள் ட்ரொன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அறிவித்துள்ளார்.

Update: 2024-04-07 16:51 GMT

ராஜ்நாத் சிங் 

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டிலும் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என பாஜக தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாட்கள் பயணமாக நாளை திங்கள் மதுரை வருகிறார்.

தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய தலைவர்கள் தொடர்ந்து தமிழகம் வருகை வந்த வண்ணமே உள்ளனர்.இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் சிங் தனி விமானம் மூலம் தமிழகம் வருகிறார்.

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் வருகையையொட்டி நாளை திங்கட்கிழமை (08.04.2024) ஒரு நாள் மட்டும் நாமக்கல் மாவட்டத்திற்குள் ட்ரொன்கள் (Drone ) பறக்க தடை விதித்து உத்தரவிடப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News