திமுக வட்டச் செயலாளர் ராஜினாமா

தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் கட்சியினரை மதிக்காததாகக்கூறி வட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-01-13 08:55 GMT

தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் கட்சியினரை மதிக்காததாகக்கூறி வட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தூத்துக்குடியை சேர்ந்தவர் கீதா செல்வ மாரியப்பன் இவர் காவல் துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர் திமுகவில் இளைஞர் அணியில் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது 39 ஆவது வட்டச் செயலாளராகவும் தூத்துக்குடி மேலூர் பத்திரகாளி அம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கீதா செல்வ மாரியப்பனை மேலூர் பத்திரகாளியம்மன் அறங்காவல் குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இதையடுத்து தனது பதவியை ஏன் பறித்தீர்கள் என்று அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து வட்ட செயலாளருக்கு கீதா செல்வ மாரியப்பன் கேட்பதற்காக தூத்துக்குடி மாவட்ட திமுக அலுவலகம் சென்றுள்ளார் அப்போது அங்கே இருந்த அமைச்சர் கீதா ஜீவன், கீதா செல்வ மாரியப்பனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் கீதா செல்வ மாரியப்பன் கூறுகையில் அமைச்சர் கீதா ஜீவன் தன் மீது வந்த புகாரை முறையாக விசாரிக்காமல் அறங்காவல குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் மேலும் என்னை போன்ற ஆரம்ப கால திமுக விசுவாசிகளை உரிய முறையில் மதிக்காமல் ஒருமையில் பேசி வருவதாகவும் கட்சிக்காரர்கள் பார்க்க சென்றாள் மகாராணி போல் உட்கார்ந்து கொண்டு தங்களை உட்காரக்கூட சொல்லாமல் அவமதிப்பதால் அமைச்சர் கீதாஜீவன் மாவட்ட செயலாளராக இருப்பதால் அவரின் கீழ் பணிபுரிய விருப்பமில்லை எனவே எனது வட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News