கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்

வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் கடலூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-07 03:40 GMT

வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 7 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News