கடலூர்: தேமுதிக வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டி

கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டியிட உள்ளார்.

Update: 2024-03-22 13:02 GMT

தேமுதிக வேட்பாளர் 

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக போட்டியிடுகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளராக சிவக்கொழுந்து அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பதும், தற்போது கடலூர் வடக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News