வடலூர் அருகே நிலவேம்பு கசாயம் வழங்கல்

Update: 2023-11-09 12:55 GMT

வடலூர் அருகே நிலவேம்பு கசாயம் வழங்கல்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காட்டுக்கொல்லை கிராமத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் வகை கொசு உற்பத்தியை தடுக்கும் வண்ணம் கிணறுகளில் கம்பூசியா வகை மீன்கள் வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் தலைமையில் விடப்பட்டது. இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News