விஜயகாந்த் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் - ரஜினி

விஜயகாந்த் மறைவு துரதிஷ்டம் என்றும், அவர் நலமுடன் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Update: 2023-12-29 03:27 GMT

ரஜினிகாந்த் 

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் மறைந்து மிகப் பெரிய துரதிஷ்டம். விஜயகாந்த் மன உறுதி உள்ள மனிதர் எப்படியும் அவர் உடல்நிலை தேறிவிடும் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பார்க்கும் போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது. விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். என்றார்.

Tags:    

Similar News