பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Update: 2024-01-20 07:53 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இந்தக் கோயிலில் ஜனவரி 25-ம் தேதியன்று தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பயணிகளின் வசதிக்காக மதுரை - பழநி இடையே ஜனவரி 24 மற்றும் 25 உள்ளிட்ட நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மதுரை - பழநி தைப்பூச சிறப்பு ரயில் (06722) குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு காலை 08.30 மணிக்கு பழனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் பழநி - மதுரை தைப்பூச சிறப்பு ரயில் (06721) பழநியில் இருந்து மாலை 05.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.
Tags:    

Similar News