மகாத்மா காந்தி நினைவு தின கூட்டம்

வெப்படை பகுதியில் மகாத்மா காந்தி நினைவு தின தெருமுனை கூட்டம் நடைபெற்றது

Update: 2024-01-31 11:23 GMT


வெப்படை பகுதியில் மகாத்மா காந்தி நினைவு தின தெருமுனை கூட்டம் நடைபெற்றது


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பேருந்து நிறுத்த பகுதி அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் , மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு மதச்சார்பின்மை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் தோழர் சந்திரமதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜி.சேகர், வி.சண்முகம், உள்ளிட்ட தோழர்களும், வாலிபர் சங்கத்தின் ஒன்றிய குழு ஒன்றிய செயலாளர் ராஜ்தேவ்,மாவட்ட குழு உறுப்பினர் கவின் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News