கடவுச்சீட்டில் முறைகேடு திருச்சியில் இருவா் கைது !

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணம் செய்தது தொடா்பாக திருச்சி விமான நிலையத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

Update: 2024-04-02 04:35 GMT

கடவுச்சீட்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா் கோவில் அருகே உள்ள திட்டக்கூா் குட்டிக்குடியேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் சூ. செபாஸ்டியன் (49). இவா், சனிக்கிழமை (மாா்ச் 30) நள்ளிரவு மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து, விமானம்மூலம் திருச்சி வந்தாா். அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை, விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இதில், அவா் போலி ஆவணம் மூலம் தனது பிறந்த தேதியை அவரது கடவுச்சீட்டில் மாற்றம் செய்திருந்தது தெரியவந்தது. இது குறித்து குடியேற்றப்பிரிவினா் அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செபாஸ்டியனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மற்றொருவா் கைது : திருப்பத்தூா் மாவட்டம், இரணியூா் அருகே உள்ள மாா்க்கண்டேயன் பட்டியைச் சோ்ந்தவா் சி. சந்திரன் (50). இவா், போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்து, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த வ. முருகன் ((54) என்ற பெயரில் கடவுச்சீட்டு எடுத்து மலேசியா சென்றுவிட்டு சனிக்கிழமை நள்ளிரவு திருச்சி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஞாயிற்றுக்கிழமை சந்திரனை கைது செய்தனா்.

Tags:    

Similar News