காரைக்குடியில் காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்

காரைக்குடியில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2024-05-10 09:07 GMT

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஆலங்குடியார் வீதி அருகே வசிப்பவர் சித்ரா. இவர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் அவருக்கு 18 வயது நிறைவடைந்தது. இவரது அக்கா வீட்டு அருகே வசித்து வரும் சூர்யா என்ற கொத்தனார் வேலை பார்க்கும் இளைஞரை சித்ரா கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்ததோடு பாதுகாப்பு கேட்டு காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

18 வயது நிறைவடைய காத்திருந்து காதலர்கள் திருமணம் செய்து கொண்டு, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News