அரசுப் பள்ளிக்கு பாட புத்தகங்கள் வழங்கல்

பள்ளிகள் திறப்பை ஒட்டி அரசு பள்ளிகளில் பாட புத்தகங்கள் நகர மன்ற தலைவர் துணைத் தலைவர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

Update: 2024-06-12 06:51 GMT

அரசுப் பள்ளிக்கு பாட புத்தகங்கள் வழங்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு,பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ. செல்வராஜ், நகர மன்றத் துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் கிருஷ்ணவேணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி துவக்கப்பள்ளி கண்டிபுதூர், நகராட்சி தொடக்கப்பள்ளி ஆவரங்காடு, ஆகிய பள்ளிகளுக்கு சென்று பள்ளி மாணவ மாணவிகளை வரவேற்று இனிப்புகள் வழங்கி பள்ளி பாட புத்தகங்களை வழங்கினர்.

இந்த நிகழ்வின் போது பள்ளிபாளையம் மன்ற உறுப்பினர் சிவம், நகர திமுக நிர்வாகிகள் திருநாவுக்கரசு,நந்த பிரகாஷ், குமார், சண்முகம், ரவி, பச்சையப்பன், சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து பலர் கொண்டனர்.

Tags:    

Similar News