தூத்துக்குடியில் கணவரை பிரிந்த மனவேதனையில் பெண் தற்கொலை

தூத்துக்குடியில் கணவரை பிரிந்த மனவேதனையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-07-02 16:37 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடி தாளமுத்துநகர், துரைசிங் நகரைச் சேர்ந்தவர் பயான் மனைவி ஜெய்னா பானு (32). இவர் குடும்பத் தகராறு காரணமாக 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியே வசித்து வந்தார். இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News