பாண்டமங்கலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் பறிமுதல்.

பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா வேலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-07-15 15:53 GMT
பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு டீ கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று பாண்டமங்கலத்தில் உள்ள சீனிவாசன்(50) என்பவரது டீ கடையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் டீ கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 200 குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் சீனிவாசன் மற்ற கடைகளுக்கும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த சீனிவாசனை வேலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News