ஆடி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு சாய்பாபா கோயிலில் குரு பூர்ணிமா விழா.

கீரம்பூ அடுத்துள்ள சாய் தபோவன சாய்பாபா கோயிலில் ஆடி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-07-21 07:16 GMT
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய் தபோவன சாய்பாபா கோயிலில் ஆடி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முன்னதாக காலை 8.15 மணியளவில் நைவேத்தியம்,ஆரத்தியும் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணி முதல் 12.30 வரை சாயி சத்திய விரத பூஜையும்,கூட்டு பிராத்தனையும்,ஸ்ரீ சாயி சத்சரிதம் பாராயணம்,ஸ்ரீ சாயி நாம ஜெபம் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாய் தரிசனம் செய்தனர். குரு பூர்ணிமா பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சாய் தபோவன கோயில் நிர்வாகம் சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Similar News