மின் மோட்டார் ஒயர்களை திருடிய இரண்டு வாலிபர்கள் கைது.

6 கிலோ மின் மோட்டார் ஒயர்கள் பறிமுதல். போலீசார் விசாரனை

Update: 2024-07-23 10:53 GMT
கைது செய்யப்பட்ட இரு வாலிபர்கள்
மின் மோட்டார் ஒயர்களை திருடிய இரண்டு வாலிபர்கள் கைது.6 கிலோ மின் மோட்டார் ஒயர்கள் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கோடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் 45 என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த மின் மோட்டார் ஒயர்களை நேற்று முந்தினம் மர்மநபர்கள் திருடி சென்றனர். காலையில் வந்து பார்த்த ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது மாதேப்பள்ளி பகுதியில் இரண்டு வாலிபர்கள் மின் மோட்டார் ஒயர்களுடன் வாலிபர்கள் சுற்று திரிவதாக தெரிய வந்தது.அங்கு சென்று இரண்டு வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் காவல்துறை தகவல் தெரிவித்தனர். தகவலரிந்து வந்த வேப்பனப்பள்ளி போலீசார் இரு வாலிபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள முஸ்லீம்பூர் கிராமத்தை சேர்ந்த சாபிர் 23, முகமது உசேன் 24 ஆகிய இருவரும் அப்பகுதியில் மின் மோட்டர் ஒயர்களை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து அவகளிடன் இருந்து 6 கிலோ மின் மோட்டார் ஒயர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News