பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படத்திறப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்

Update: 2024-07-23 16:14 GMT
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படத்திறப்பு
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மதுராந்தகம் நகரில் நகர செயலாளர் கிட்டு பிரபாகரன் ஏற்பாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் கலைக்கதிரவன், தொகுதி செயலாளர் பாக்கம் பேரறிவாளன், மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வாசுதேவன், ராஜா ஆகியோர் கலந்துகொண்டு ஆம்ஸ்ட்ராங் திருவருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் விசிக கட்சியின் ஒன்றிய செயலாளர் கள் கதிர்வாணன், முகிலன், பன்னீர்செல்வம், தயாநிதி மற்றும் பேரூர் செயலாளர் சமத்துவன், விசிக கட்சியின் நிர்வாகிகள் அப்பாதுரை, அம்பேத்கர் பித்தன், வழக்கறிஞர்கள் ராஜபாரதி, வினோத், பங்களா காலனி முருகன், தலித்ஏழுமலை, மகாதேவன், நூர் முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News