மதுராந்தகம் அருகே தண்ணீர் குடிக்க வந்த புள்ளி மான் வெறி நாய் கடித்து பலி

மதுராந்தகம் அருகே தண்ணீர் குடிக்க வந்த புள்ளி மான் வெறி நாய் கடித்து பலி

Update: 2024-07-25 04:30 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கதில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பெரும்பாக்கம் எல்லைக்குட்பட்ட வனப்பகுதி உள்ளது அதன் அருகாமையில் குடிநீருக்கு ஆதாயமான ஏரி உள்ளது, இன்று காலை சுமார் மூன்று வயதுள்ள ஆண் புள்ளிமான் ஒன்று ஏரியில் தண்ணீர் குடிக்க வந்துள்ளது. அங்கிருந்த வெறிநாய்கள் புள்ளிமானை துரத்தி கடித்துள்ளது.இதில் பயந்து போன புள்ளி மான் தண்ணீருக்குள் குதித்து மூச்சு திணறி இறந்துள்ளது. இறந்த மானை கண்ட அப்பகுதி கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர் வனத்துறையினர் இறந்த மானை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அச்சரப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் வனப்பகுதியில் மானை புதைத்தனர்.

Similar News