வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா, எம்எல்ஏ பங்கேற்பு

வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா, எம்எல்ஏ பங்கேற்பு

Update: 2024-07-26 09:16 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முண்ணுத்திகுப்பம், நெல்வாய், பழையனூர் ஊராட்சிகளின் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முண்ணுத்திகுப்பம், நெல்வாய், பழையனூர் பகுதிகளில் பகுதிநேர நியாய விலை கடை கட்டிடம், 30000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிடம் அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களிடம் மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 47.50 இலட்சம் நிதி ஒதுக்கி முண்ணுத்திகுப்பம், நெல்வாய், பழையனூர் பகுதிகளில் பகுதிநேர நியாய விலை கடை கட்டிடம், 30000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிடம் அமைக்கும் பணி மேற்கொண்டு அதற்கான திறப்புவிழா மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் V.G.குமரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது... இந்நிகழ்வில்... மதுராந்தகம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் K.கீதா கார்த்திகேயன், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தனர்.. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள், ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

Similar News