மகள் மாயம் தந்தை போலீசில் புகார்

புகார்

Update: 2024-07-31 00:35 GMT
கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது 16 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல், பள்ளிக்கு சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை சுரேஷ் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி விசாரிக்கின்றனர்.

Similar News