ஆதரவற்ற பெண் சிகிச்சை பலனின்றி பலி

பலி

Update: 2024-08-01 06:05 GMT
கள்ளக்குறிச்சி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சையில் பெற்ற ஆதரவற்ற பெண் இறந்தார். கள்ளக்குறிச்சி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில் வசந்தி, 55; என்பவர் குடும்பத்தினரின் ஆதரவின்றி தனியாக சுற்றித் திரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன் உடல்நிலை பாதித்த வசந்தி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி சிகிச்சை பலனின்றி வசந்தி இறந்தார். இது குறித்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய திட்ட ஒங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த வசந்தி எந்த ஊர், அவரின் குடும்பத்தினர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News