சின்னசேலம் கால்நடை மருந்தகம் பின்புறம் உள்ள பழைய கட்டடத்தில் இருந்த மின் மோட்டாரை ஒருவர் திருட முயன்றார். இதனைப் பார்த்த கால்நடை உதவி மருத்துவர் பேபி உஷா மற்றும் ஊழியர்கள் அவரை கையும் களமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் நாட்டார்மங்கலம் காட்டுகொட்டாயைச் சேர்ந்த கண்ணன், 45; என்பது தெரிந்தது. புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர்.