கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

பதிவு

Update: 2024-08-03 00:12 GMT
மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் வெங்கடேசன், 28; இவர் தனது டாரஸ் லாரியை தம்மம்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் கணேசன் என்பவருக்கு 11 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விற்று ஏப்ரல் 5ம் தேதி முன் பணமாக 3 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். மீதி பணத்தை 15 நாட்களுக்குள் தருவதாக கூறி கணேசன் லாரியை ஓட்டிச் சென்றார். நிலுவை தொகையை கேட்ட வெங்கடேசனை, திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில், கணேசன் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News