ஒருவரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

வழக்கு

Update: 2024-08-03 00:16 GMT
தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு முருகன், 45; இவர், கடந்த 31ம் தேதி, இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் இடங்களை அளவிடும் பகுதியில் நின்று வேடிக்கை பார்த்தார். அப்போது அப்பகுதி காலனியைச் சேர்ந்த காமராஜ், 50; ஊர் முக்கியஸ்தர்களை ஆபாசமாக திட்டினார். சிறிது நேரத்தில், காமராஜின் வீட்டின் முன் நடந்த சென்ற முருகனை வழிமறித்து காமராஜ், அவரது மனைவி லதா ஆகிய இருவரும் திட்டி தாக்கினர். புகாரின்பேரில், காமராஜ், லதா ஆகியோர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News