வசிஷ்ட நதிக்கரையில் தடுப்புசுவர் அமைக்க கோரிக்கை

கோரிக்கை

Update: 2024-08-12 16:30 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் வசிஷ்ட நதிகரையில் பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் சாலையோரம் ஒரு புறம் கற்கள், தடுப்புச்சுவர் ஏதும் இல்லாமல் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த பாலத்தில் சாலை அமைக்கும் பணிக்காக மண், ஜல்லி கற்கள் மேடு போல் குவிக்கப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது மழை பெய்தால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலைக்காக குவிக்கப்பட்ட மண், ஜல்லி கற்கள் வீணாகி வருகிறது. எனவே மண் அரிப்பை தடுக்கும் வகையில் சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News