கெங்கவல்லி பள்ளியில் தேங்கிய மழை நீர்

நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2024-08-12 16:33 GMT
கெங்கவல்லி:சேலம், கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று பள்ளி வளாகம் மற்றும் அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், மாணவிகள் விளையாட முடியாமல் தவித்தனர். இந்நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News