பொள்ளாச்சி அருகே கழிவுநீர் குழாய் பிரச்சனையில் அடி தடி மோதலால் பரபரப்பு.,

பொள்ளாச்சி அருகே கழிவுநீர் குழாய்யை அடைத்து வைத்த தனி நபரை தட்டி கேட்டவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் பரபரப்பு., - ஆனைமலை காவல் நிலைய போலீசார் விசாரணை.,

Update: 2024-08-18 12:11 GMT
பொள்ளாச்சி அருகே கழிவுநீர் குழாய்யை அடைத்து வைத்த தனி நபரை தட்டி கேட்டவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் பரபரப்பு., - ஆனைமலை காவல் நிலைய போலீசார் விசாரணை., பொள்ளாச்சி., ஆகஸ்ட்.,18 பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் நித்திய பிரியா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீடு வாங்கியுள்ளார் அவர் வீட்டின் அருகில் வசிக்கும்  பாவா என்பவர் அவரது வீட்டின் முன்புறம் உள்ள கால்வாயில் கழிவு நீர் தேங்குவதாக கூறி நித்திய பிரியா வீட்டு கழிவு நீர் குழாயை அடைத்தாக தெரிகிறது., இதனையடுத்து  நித்திய பிரியா காவல் நிலையம், சார் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் பலமுறை அடைக்கப்பட்டுள்ள கால்வாயை திறந்து விட்டுள்ளனர்., ஆனால் தொடர்ந்து அடிக்கடி கழிவு நீர் குழாயை பாவா அடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் நித்யபிரியா கடந்த வாரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் புகார் அளித்தார் இதன் அடிப்படையில் அடைப்பை நீக்க வந்த ஊராட்சி மன்ற தலைவர்  சஹர்பானுபைசல், துணைத்தலைவர் லட்சுமி சிவசாமி, சுகாதாரத்துறை அதிகாரி சுதாகர், கழிவு நீர் குழாய் அடைப்பை நீக்கினர். அங்கு வந்த பாவா அங்கிருந்து ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் முன்னிலையில்  பொதுமக்கள் மத்தியில் அப்படித்தான் அடைப்பேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்., தொடர்ந்து அவர்களை தாக்கி கைகலப்பில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அங்க வந்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,

Similar News