எடப்பாடியில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு...

திமுகவில் இருந்து விலகி 50பேர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்களை சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சுரேஷ்பாபு கட்சியின் துண்டு அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்...

Update: 2024-08-23 18:29 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி அலுவலகம் எடப்பாடியில் இருந்து சேலம் செல்லும் முக்கிய பிரதான சாலையான கேட்டுகடை பகுதி அருகே புதியதாக திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் எடப்பாடி ஒன்றிய கழக செயலாளர் மெய்வேல் முன்னிலையில்  கேப்டனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  தொடர்ந்து தாதாபுரம் மணியக்காரன் பாளையம் திமுக கிளைக் கழகச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் பெண்கள் உள்பட 50 பேர் திமுகவில் இருந்து விலகி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களை சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சுரேஷ் பாபு கட்சியின் துண்டு அணிவித்து வாழ்த்தி வரவேற்றார் அப்போது மாவட்ட கழக அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாலர் தங்கமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் பாலாஜி, ரமேஷ்,அமுதா பூனா,செயற்குழு உறுப்பினர் சசிகுமார்,ஒன்றிய துணைச் செயலாளர்  மணி (எ) வெங்கடாசலம் ஜெயபால் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

Similar News