கேர்மாளம் மலைப்பகுதியில் ரோட்டோரமாக அரசு பஸ் கவிழ்ந்து விபத்து பயணிகள் படுகாயம்

கேர்மாளம் மலைப்பகுதியில் ரோட்டோரமாக அரசு பஸ் கவிழ்ந்து விபத்து பயணிகள் படுகாயம்

Update: 2024-08-29 13:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கேர்மாளம் மலைப்பகுதியில் ரோட்டோரமாக அரசு பஸ் கவிழ்ந்து விபத்து பயணிகள் படுகாயம் சத்தியில் இருந்து கடம்பூர் வழியாக கேர்மாளம் செக்போஸ்ட் வரை அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். நேற்று மதியம் பூதாலபுரம் அருகே வி.எம் தொட்டி என்ற இடத்தின் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பிக்கப் வேனுக்கு வழி விட டிரைவர் முயற்சித்த போது பஸ் எதிர்பாராத விதமாக ரோட்டிக் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20க்கும் மேம்பட்ட பயணிகள் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்கள். காயமடைந்த வர்களை மீட்டு அம்புலன்ஸ் மூலம் கேர்மாளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர. விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News