ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயற்சி

ஆலடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

Update: 2024-08-29 18:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கலர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி பிரியா (வயது 21). இவர் நேற்று அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை அடுத்த இலுப்பையூர் காலனியைச் சேர்ந்த ஏழுமலை மகன் தேவா (18), என்பவர் குடிபோதையில் பிரியாவின் துப்பட்டாவை பிடித்து இழுத்து அவரது தாலி செயினை அறுக்க முயன்றுள்ளார். அப்போது பிரியா தேவாவை தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து ஓடி தப்பித்துள்ளார். இது குறித்து பிரியா கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News