ஆத்தூர் டாஸ்மார்க் அருகே டூ வீலர்- சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
ஆத்தூர் டாஸ்மார்க் அருகே டூ வீலர்- சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
ஆத்தூர் டாஸ்மார்க் அருகே டூ வீலர்- சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். ஈரோடு மாவட்டம், நேதாஜி ரோடு, முனிசிபல் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் விவேக் வயது 30. இவர் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 9: 40- மணியளவில், கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிச்சிபாளையத் திலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர் திசையில், சேலம் மாவட்டம், சங்ககிரி, முஸ்லிம் தெருவை சேர்ந்த அப்பாஸ் வயது 27 என்பவர் வேகமாக ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வேன், விவேக் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விவேக் வாகனத்துடன் கீழே விழுந்ததில் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த விவேக்கின் தந்தை தங்கவேல் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இது தொடர்பாக சரக்கு வேனை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய அப்பாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.