புதுக்கோட்டை, ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக காலை முதல் மாலை வரை வெயிலில் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறது. காற்றுடன் மழை பெய்து வருவதால் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.